பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பாடி நமது கொடியை வனங்கிடு வோமே - நாம் பலரும் ஒன்றாய்க் கூடி ஆடி மகிழ்ந்திடு வோமே. * கோட்டை, வீடு, வீதி யெங்கும் கொடி பறக்குமே - இன்று கோடி கோடி மக்க ளுக்கும் இன்பம் பொங்குமே! சுதந்தி ரத்தின் பெருமை தன்னை உணர்ந்து வாழுவோம் - மக்கள் துயரம் யாவும் துடைப்ப தற்கே உறுதி பூணுவோம். இதயம் ஒன்றி இந்தி யத்தாய் பெற்ற பிள்ளைகள் - நாம் இன்ப முற்று வாழு தற்கு வழிகள் காணுவோம். 98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/101&oldid=859871" இலிருந்து மீள்விக்கப்பட்டது