பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பையில் ஒருகா சில்லாமல் பார்த்துக் கொண்டே நாங்களுமே, அங்கே நின்றோம். அச்சமயம், அவசர மாக ஒருபையன் ஓடி வந்தான், அவன்கையை உற்றுப் பார்த்தார் கடைக்காரர். வந்தவன் கையில் ஒருரூபாய் வட்ட மாக இருந்திடவே, "வெட்டிக் கூட்டம் போடாமல் விலகிப் போங்கள், கழுதைகளா” என்றே கூறிக் கோபமுடன் எங்களைப் பிடித்துத் தள்ளியபின், பணத்துடன் வந்த பையனையே பரிவுடன் அருகில் வரவேற்றே, “என்னடா தம்பி வேண்டும்?” என இதமாய்க் கேட்டார் கடைக்காரர். பணத்தைப் பையன் நீட்டினனே, பக்குவ மாகக் கூறினனே, "அவசரம், அவசியம் ஆனதனால், அப்பா இங்கே அனுப்பினரே. 155

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/160&oldid=859989" இலிருந்து மீள்விக்கப்பட்டது