இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இருபது பேரைக் கத்தியினால் இரக்கம் இன்றி வெட்டினேன்நான். ஒருவரும் செத்துப் போகவில்லை. ஒருதுளி ரத்தமும் சிந்தவில்லை. 'குய்யோ, முறையோ என்றவர்கள் கூக்குரல் கூடப் போடவில்லை. பொய்யே இல்லை; சொன்னதெலாம் மெய்தான், மெய்தான் மெய்யேதான். பத்துப் பேர்கள் கைகளிலே; பத்துப் பேர்கள் கால்களிலே, மொத்தம் இருபது பேர்களடா! வெட்டப் பட்டவை நகங்களடா! 217