பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழைமரம், வாழைமரம் வழவழப்பாய் இருக்கும் மரம். சீப்புச்சீப்பாய் வாழைப்பழம் தின்னத்தின்னக் கொடுக்கும் மரம். பந்திவைக்க இலைகளெலாம் தந்திடுமாம் அந்த மரம். காயும்பூவும் தண்டுகளும் கறிசமைக்க உதவும் மரம். கலியான வாசலிலே கட்டாயம் நிற்கும் மரம்! 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/36&oldid=860090" இலிருந்து மீள்விக்கப்பட்டது