பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 3 மலரும் நினைவுகள் பெற்றவையாதலால் இவற்றைக் கற்போரிடத்தும் சுவாதுபவத்தை எழச் செய்ய வல்லவை. இச்செய்திகளை யெல்லாம் வடமொழி அறியாதமிழருக்கு முதன் முதலாக எடுத்துக்காட்டி உதவியவர் திரு. பு. ரா. புருடோத்தம நாயுடு அவர்கள். இத்தகைய பெரியாரைத் தமிழ் உள்ளங்கள் வாழ்த்துகின்றன. வைணவ உள்ளங்கள் வணங்கி மகிழ்கின்றன. திருப்பதியில் பணியாற்றியபோது தமிழகத்திலிருந்து பல அன்பர்களின் மணிவிழா மலர்கட்கும் பலசிறப்பு மலர்கட்கும் கட்டுரைகள் வழங்குமாறு அழைப்புகள் வந்தன. பெரும்பாலும் அம்மலர்கட்கு எழுதிய கட்டுரை கள் திவ்வியப் பிரபந்தத்தின் மேலேயே மலர்ந்தன. திருமலை திருப்பதி தேவஸ்தானம் பதிப்பிக்கும் சப்தகிரி' என்ற திங்கள் இதழிலும் பிரபந்தத்தின் மேல் எழுதிய சில கட்டுரைகள் வெளிவந்தன. சென்னை வந்த பிறகு ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் திங்களுக்கு ஒன்றாக ஒராண்டுக் காலம் நாலாயிரத்திலேயே பன்னிரண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். இவற்றில் இரண்டு பொழிவுகள் கட்டுரை வடிவம் பெற்றன . இங்ங்னம் பல்வேறு காலத்தில் பல்வேறு சந்தர்ப்பத்தில் எழுதப் பெற்ற 19 கட்டுரைகள் சில நோக்கில் நாலாயிரம்’ என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றன. இந்த நூலை ஈட்டின் தமிழாக்கம்' என்ற நூலை பத்துத் தொகுதிகளாக வெளியிட்டுத் தமிழர்கட்கு வைணவ விருந்தளித்த திரு. நாயுடு அவர்கட்கு, முத்தர்கள் பராவும் சீர்த்திசால் திருவாய் மொழியெனும் பாற்கடல் நடுவண் வித்தகம் பெருகும் தண்ணருள் உளத்தை மேவுநஞ் சேடனாய் மாற்றிப்