பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/505

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490 மலரும் நினைவுகள் நோக்கில்-பெரியவாச்சான் பிள்ளையின் இருபத்து நால யிரப்படி மட்டிலும்தான் இருந்தது. இப்போது காரைக்குடியிலிருந்தபோது திரு. முத்து வேங்கடாசலம் அய்யர் அவர்கள் குறிப்பிட்ட பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியாரின் திவ்வியார்த்த தீபிகை நினைவிற்கு வந்தது. இந்த உரையைப் பெற வேண்டுமே. காஞ்சி சென்று இதனை வாங்கி வர நினைத்துக் கொண்டிருந்தபோது திருவேங்கடவன் பல்கலைக் கழகக் கீழ்த்திசை ஆய்வு fgyalsaf.5550 (Sri Venkateswara University Oriental Research Institute) வடமொழித் துறையில் பணியாற்றி வந்த திரு K. சீநிவாசவரதன் புருஷகாரமாக (தகவுரை கூறுபவராக) அமைந்தார். அவர் பிரதிவாதி பயங்கரத் திற்கு மிகவும் வேண்டியவர். அவர் திவ்வியார்த்தத் தீபிகை முழுவதையும் ரூ. 50/-க்குப் பெற்றுக் கொண்டு வந்து தந்ததாக நினைவு. இந்த உரை நூல்தான் என் ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தது. ஏகலைவனுக்கு துரோணர் மானசீக ஆசாரியராக அமைந்தது போல பிரதிவாதி பயங்கரம் எனக்கு மானசீகமாக ஆசாரியராக அமைந்தார் என்று சொல்லலாம். இதனை எப்படியோ தெரிந்து கொண்ட என் அரிய நண்பரும் வைணவப் பெரியாருமாகிய திரு. பெ. இராமாநுஜம் என்பார், தன்னிலைமை தானறியாத் தன்மை யாளன் சாதிவெறி சமயவெறி சற்று மில்லான் துன்னியநல் சைலுகுலத் தோன்ற லேனும் தூயதிருக் கச்சிநகர் அண்ணங் கரராம்