பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 மலர் காட்டும் வாழ்க்கை

மகிழ்கிறார்கள் குற்றமற்ற இல்வாழ்க்கைப் பண்பு நிறையப் பெற்ற குடும்ப மகளிர். இவ்வாறு புறநானூறு விருந்து போற்றும் மகளிரைப் போற்றுகின்றது.

அமிழ்தட்டு ஆனக் கமழ்குய் அடிசில் வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை மகளிர்............

(புறநானூறு : 10 : 7-9) நள்ளிரவு நோமானலுங்கூட வந்த விருந்தினரை அகமும் முகமும் கோளுமல் விருந்தயரும் பெண்களை முல்லைக் கற்பு நிறைந்த மகளிராக நற்றிணைப் பாடலொன்று போற்றி நிற்கிறது.

அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள்

(நற்றிணை : 142 : 9-11) தலைவனுடன் ஊடிப் பிணங்கி யிருக்கும் தலைவி, விருந்தினரைக் கண்ட அளவில் அவ்வூடலே விட்டுவிடுவாள். வந்த விருந்தினர்க்கு வகையான சமையல் வடித்து நிற்பதிலே கவனம் செலுத்துவாள். ஊடியிருந்த அவள் முகத்தில் புன்முறுவல் தவழும்.

அட்டி லோளோ அம்மா அரிவை எமக்கே வருகதில் விருந்தே சிவப்பான்று சிறுமுள் எயிறு தோன்ற முறுவல் கொண்ட முகங்காண் கம்மே.

(நற்றிணை : 1.2 : 9-12)

பரத்தையர்பால் நட்பாடி மகிழ்ந்துவிட்டுத் தன் மனை நோக்கி வருகிருன் தலைவன். அவன் ஒழுகலாற்றினைக் கண்டித்து அவளுேடு ஊடியிருக்கத் தலைவிக்கு நேரமில்லை. காரணம், விட்டிலே மிகுதியான விருந்தினர் வந்து தங்கிச் சென்ற வண்ணமே உள்ளனர். எனவே ஊடுவதற்கு வழியே இல்லை என்று தலைவி ஒருத்தி கூறிக்கொள்கிருள்.