பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 மலர் காட்டும் வாழ்க்கை

பலாமரத்தின் பெரிய கிளையில் குரங்கு ஒன்று பாய்ந்து துள்ளுவதைக் கண்டாலும் அவள் நெஞ்சம் நடுநடுங்கி அயர்வுறும். ஆனல் இவை யெல்லாம்-இத்தகைய அச்ச மெல்லாம் காதல் தந்த ஆற்றலால் கரைந்து போயின. இன்று காதலன் வரவை நோக்கி, அவன் வரும் வழியினைச் செறிந்த நள்ளிரவிலும் உற்றுப் பார்த்துக் காத்து நிற்கும் உரத்தினை அவள் உள்ளம் பெற்றுவிட்டது என உணர்கிருள். தான் பெற்ற அஞ்சாமையினை அவளே நினைந்து வியப்புறுகின்றாள். அச்சம் குடிகொண்டிருந்த நிலையும், அது நீங்கி அஞ்சாமை வந்திறுத்த நிலையும் அவளாலேயே நினைந்து பாடப் பெறு கின்றது. இதோ அப் பாடல் :

குன்றக் கூகை குழறினும் முன்றில் பலவின் இருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும் அஞ்சுமன் அளித்துஎன் நெஞ்சம் இனியே ஆரிருட் கங்குல் அவர்வரின் சாரல் நீளிடைச் செலவா னதே.

(குறுந்தொகை : 15.3)

திருமணத்திற்கு முன்னர்தான் என்றில்லை; திருமணமாகி அன்போடு இல்வாழ்க்கை தொடங்கி வாழும்போதும் தலைவிக்குக் காதல் தந்த ஆற்றல் துணை நிற்கின்றது. காதலி யாக இருந்த அவள் இப்போது மனைவியாக விளங்குகின்றாள். கணவனுக்குத் தயிர்க் குழம்பு சமைக்கின்றாள். முற்றிய கெட்டித் தயிரைத் தன் மெல்லிய காந்தள் போன்ற விரல் களாலே பிசைந்து, சேர்க்க வேண்டிய பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கத் தொடங்கினுள். தாளிக்கும் நேரத்தில் தையலின் சேலை நெகிழ்ந்தது. குறித்த நேரத்தில் விரைந்து தாளிக்கத் தவறில்ை நறுமணமும் சுவையும் குன்றுமெனத் தன் அட்டிலாக்கும் அனுபவத்தால் தெரிந்து வைத்திருந்த அவள், தயிர் பிசைந்த கையைக் கழுவாமலே நெகிழ்ந்த ஆடையை உடுத்திக்கொண்டாள். உடனே தாளித்ததால்