பக்கம்:மலர் காட்டும் வாழ்க்கை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல குறுந்தொகை $6

தாளிப்புப் புகை எழுந்து அவள் கண்ணிற்பட்டு உறுத்திய போதிலும், தாளிப்பைத் தவறவிட்டால் தயிர்க்குழம்பின் சுவைப்பயன் குறையும் என்று கண்டு, புகைக்கு இடையேயும் உற்று நோக்கித் நோக்கித் துழாவிச் சமைத்து முடித்தாள். கணவன் வீடு திரும்பியவுடன் அவனுக்குப் பரிமாறிள்ை. அவனே ‘நன்றாயிருக்கிறது என்று பாராட்டியவாறே *-ண்டான். தன் சமையலுக்குக் கிடைத்த பாராட்டை எண்ணி மனேவியின் அகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது. அகத்தே நிறைந்த மகிழ்ச்சி புறத்தே நுட்பமாகப் புன்முறுவலாக விளங்கியது. உலகியலைச் செம்மைப்படுத்தும் சீர்மை வாய்ந்த இத் தலைவன் தலைவியரின் இல்லறப்பாங்கின் ஏற்றத்தினைப் பாருங்கள் :

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்துழந்து அட்ட தீம்பு வரிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.

-- (குறுந்தொகை : 167)

காதல் தந்த துன்பம்

காதலர் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துறைய ஒருப்படார். ஏதேனும் ஒர் காரணம்பற்றிப் பிரியவேண்டி நேரிட்டாலும் அப் பிரிவாற் பெரும் பேதுறுவர். திருமணத்திற்கு முன்னும் பின்னரும் பொருளிட்டி வரவேண்டும் என்னும் ஆர்வம் முந்துறத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல் உண்டு. முன்னேர் பாடுபட்டுத் தேடி வைத்துள்ள பொருளைச் செலவு செய்து அழிப்பவர்கள், பொருள் உள்ளவர்களாக மதிக்கப்பட மாட்டார்கள்: பொருள் இல்லாதவர்களின் வாழ்க்கையோ வெனில் இரந்து உயிர் வாழ்வதைக் காட்டிலும் இழிவான தாகும்.