மனம் 193
நூல் இங்கே நினைவிற்கு வருகிறது. ஐரோப்பியப் போர் ஒன்றில் காயம்பட்ட வீரர்களுக்கு அரும்பெருந் தொண் டாற்றிய ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) என்னும் பெண்மணியின் வரலாற்றைக் கூறும் நூல் அது. அந்நூலில் ஒரு காட்சி: நைட்டிங்கேலும் அவள் காதலன்-ஃஎன்றி ட்ரமாயின் (Henry Tremayne) என்பவனும் ஒரு நீர் ஊற்றின்முன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கின்றனர். ‘நீ என்னை மணந்துகொள்ள மாட்டாயா ?” என்று காதலன் கேட்கிருன். ‘ திரு. மணம் என்பது அடிமை வாணிகச் சந்தையில் செய்யும் ஒருவகைக் கொள்முதல் அல்லவா ?” என்று காதலி கேட்கிருள். ‘திருமணம் செய்துகொண்ட பின்புதான், பெண்கள் இந்த உலகில் தாங்கள் விரும்பும் எந்தப் பொருளேயும் பெறமுடியும் ” என்று காதலன் சொல்லு கிருன். ‘ உரிமை (சுதந்திரம்) நீங்கலாக, வேறு எதனை யும் பெறமுடியும் அல்லவா ?” என்று காதலி குத்தலாகக் கேட்கிருள். அவள் கருத்தை அவன் மறுக்கிருன்-என் நினைவிற்கு வந்தது இந்தக் காட்சிதான்.
என்னேக் கேட்டால்-நானும் ட்ரமாயின் பக் கத்தைச் சேர்ந்தவன்தான். ‘ திருமணம் ஆவதற்குமுன் ஆண்கள் உரிமையுடன் இருக்கிறார்கள்-ஆனபின் உரிமையிழந்து விடுகிறார்கள். பெண்களோ, திருமணத் திற்குமுன் உரிமையின்றிக் கிடக்கிறார்கள்-ஆனபின்போ, உரிமைபெற்று விடுகிறார்கள்”-எ ன் ப து எனது சொந்தக் கருத்து. அந்த ஆங்கில நூலில், ட்ரமாயின் சொல்வதாக, நூலாசிரியர் ரெஜினல்டு பெர்கெலி’ (Reginald Berkeley) 6T63rl Jolf GTopoff 60615;A’s பதைப் படித்த தல்ை நான் இந்த முடிவுக்கு வரவில்லை. எனது சொந்த முடிவுக்கு ஒத்திருந்த தல்ை அவர்