பக்கம்:மலர் மணம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 225.

அல்லியும் இவர்களுடன் பு ற ப், ப ட் டு வந்துவிட்டா ளாம். மைத்துனர் பாண்டியனும் ஊரில் இல்லையாம். அத்னுல் கற்பகம்மட்டும் மாறனே அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். எல்லோரும் என்னைக் கண்டு நெஞ்சம் உருகினர். கண்களில் நீர் கசிய நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தனர். தந்தையில்லாத நேரத்தில் வந்த, தால் அல்லியையும், கணவன் இல்லாத நேரத்தில் வந்த தால் கற்பகத்தையும் சீக்கிரம் ஊருக்கு அனுப்பிவிட வேண்டும் என்று அப்பா துடித்தார். அவருடைய வற். புறுத்தலினல் இரு வ ரும் பிரிய மனமின்றிச் சென் ருர்கள். அவர்களை வண்டியேற்றி அனுப்பிவிட்டு, அப்பாவும் அம்மாவும் மலருடன் சென்னையிலேயே சில: நாட்கள் தங்கினர். எனக்கு உடல்நலம் திரும்பியதும், விடுமுறை எடுக்கச்செய்து ஓய்வுக்காக ஊருக்கு அழைத்து வந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/227&oldid=656237" இலிருந்து மீள்விக்கப்பட்டது