பக்கம்:மலர் மணம்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணம் 243.

வேண்டியதுதானே ? இதன் பிறகுதான் கடந்ததை என் பெற்றாேர்க்குத் தெரிவித்தேன். தெரிவித்து என்ன செய்வது எல்லோருமாகச் சேர்ந்து வருத்தப் ப்ட்டதுதான் மிச்சம்! இப்படியே சில்லாண்டுகள் கழிந்தன.

மலர் இப்பொழுது ஓரளவு வளர்ந்துவிட்டாள். உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண் டிருக்கிருள். என் மைத்துனர் பாண்டியன் சென்னைக்கு மாற்றிக் கொண்டு வந்துவிட்டார். தங்கை கற்பகம் இப்போது சென்னையில்தான் குடித்தனம் நடத்துகிருள். இன்சு பெக்டர் மனைவியல்லவா ? அவர்களுடைய மகன் மாறன் சென்னைக் கல்லூரி ஒன்றில் படித்துக்கொண் டிருக்கிருன். எங்கள் இரு குடும்பங்களும் வெவ்வேறு இடத்தில் இருந்தாலுங்கூட, அடிக்கடி ஒன்றுசேர்ந்து கொள்ளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/245&oldid=656257" இலிருந்து மீள்விக்கப்பட்டது