மணம் 29
சென்றாள். அங்கிருந்து மூன்று பொருள்களோடு மீண் டாள். ஒன்று வெந்நீர் நிரப்பிய தர்மா பிளாஸ்க் ; இரண்டாவது ஆர்லிக்க புட்டி முன்றாவது சர்க்கரை. சூடான வெந்நீரில் ஐந்து தேக்கரண்டி ஆர்லிக்சுமாவை அள்ளி அள்ளிப் போட்டு, மூன்று தேக்கரண்டி சர்க் கரையைக் கலந்து நான்கு ஆற்று ஆற்றி, இதைப் பரு குங்கள் என்று நீட்டினுள்.
& G 3
நீ என்றேன்.
‘இல்லை, நீங்கள் என்ற பதில் வந்தது.
தைம்மாத நடுங்கு பனியில் நனைந்துவந்த எனக்கு உண்மையிலேயே அது அந்நேரம் ஓர் அரும்பெறல் அமிழ்த மாகவே தென்பட்டது. அல்லி அதைத் தயாரிக்கத் தொடங்கியதிலிருந்து, அவளது அன்பை வியந்து நான் என்னேயும் அறியாததோர் உணர்ச்சி வய்ப்பட்டிருந்த தால், அருந்தும்போதும் சரி, அருந்திய பிறகும் சரி அதன் சுவையைப்பற்றிய உணர்வே எனக்கில்லை. அல்லி என்னை வரவழைத்த காரணத்தை அறிந்து கொள்வதி லேயே என் ஆர்வம் முழுதும் முனைந்து காணப்பட்டது. மீண்டும் பேச்சைத் தொடங்கினேன்.
“ நான் இதுவரை ஒன்றுமே உன் கையாலே வாங்கி அருந்தியதில்லையே!
“ அதற்காகத்தான் இப்போது கொடுத்தேன்.”
“ அது இருக்கட்டும். ஏன் என்னே வரச்செய்தாய் ? நான் ஒன்றுமே கேள்விப்படவில்லையே.”
‘ சொல்வதற்கே எனக்கு நா எழவில்லை.”
“ கவலைப்படாமல் சொல்லு.”