பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லவாழ் உறையும்,கோனார் $09. வகைகளை அணிந்தவர்கள்; இபொய்யுரைகளை மெய்போல் பேசும் திறனுடையவர்கள், ஆண்களைத் தம் வசப்படுத்திக் கொள்வதற்காகத் தேனொழுகப் பேசும் இனிய சொற்களை யுடையவர்கள். ஆகவே, நீ உய்யும் வழியைத் தேடுவா யானால், வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே!-என்று நெஞ்சிற்குப் பணிக்கின்றார். அடுத்து, செல்வு நிலையாமையைப் பேசுகின்றார் ஆழ்வார். 'நெஞ்சமே, இவ்வுலகத்துச் செல்வம் நிலை நிற்புதன்று; உயர்ந்த வெண்கொற்றக் குடிையின்கீழ் மன்னர் மன்னர்களாய் வீற்றிருந்து யானைகள் சூழ வாழ்ந்தவர்களும் மாண்டனர் என்பதை நீ கண்டு, அல்லது கேட்டு அறிந் திருப்பாய் அன்றோ? ஆதலின் இவ்வுலகச் செல்வம் துயரை விளைவிப்பதன்றி மகிழ்ச்சி தருவதன்று என்பதை நீ எண்ணினாயாகில் திருவல்லவாழ் திருப்பதியில் பொருந்தப் பார்ப்பாயாக' என்கின்றார். இன்னும், இந்த உடலின் கீழ்மையையும் நீ அறிவாய் அன்றோ? தீண்டா வழும்பும் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும், வேண்டா நாற்ற மிகும் உடல்’ என்பதன்றோ இவ்வுடலின் நிலை? இத்தகையதான உடலில் ஐம்பொறிகளாகிய வன்குறும்பர் புகுந்து நின்று தமக்கு வேண்டியவற்றைக் காட்டும்படி தொல்லை தருவதற்கு அஞ்சியாகினாலும் திருவல்லவாழ் சென்று பொருந்துவாயாக' என்று தெருட்டுகின்றார். :இந்த உலகத்திலுள்ள நோய்கள் யாவற்றின் இருப்பிடம் இவ்வுடல். இந்த உடலைப் பொய்' என்று உணராமல் மெய்' 8. பெரி திரு 9. 7:3 9 டிெ 9.7 : 4 10. டிெ 9.7 : 5 11. திருவரங்-கலம்-17 12. பெரி திரு 9.7 : 6