பக்கம்:மலைநாட்டுத் திருப்பதிகள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#50 மலைநாட்டுத் திருப்பதிகள் களைப் பேசுகின்றது அவனது திருப்பவளம், இன்சொற்கள் சொல்லப்புக்கு இனியனான தன்னைக் கண்ட காட்சியால் தடுமாறினால், குறையும் தலைக்கட்டிக் கொடுப்பது செவ்வரி படர்ந்த திருக்கண். அவனது நோக்கிற்குத் தோற்றாரை அணைப்பது திருக்கை. உத்தேசியமான திலத்தில் (அதாவது திருவடிகளில்) விழா நின்றால் காற் கட்டவல்லது திருஉந்தி. இது நடுவே அமுக்கும் சுழி அன்றோ? இவை எல்லாவற்றிகும் தோற்று விழும் இடம் எம்பெருமானது திருவடிகள். இவை யாவும் காட்டிலெறிந்த நிலாப்போலாகாமல் பக்தர்கட்கு அநுபவிக்கக் கொடுக்கு மவன் என்பதனைக் குறிப்பிடவே பிரான் ' என்கின்றாள். இங்ஙனம் எம்பெருமானின் திருமேனியழகினை, “என் அரங்கத்து இன்னமுதர் குழல்அழகர் வாய்அழகர் கண்அழகர் கொப்பூழில் 3.3 * 登 ? எழுகமலப் பூஅழகர் என்று ஆண்டாள் கூறி அநுபவித்ததையும் நினைந்து பார்க் கின்றோம். மேலும், இங்கு பர வியூக விபவம் இவைகளுக் குரிய திருநாமங்களையும் சொல்லாமல், அல்லாத உகந் தருளின திவ்விய தேசங்களில் நிற்கின்றவர்களின் பெயர் களையும் சொல்லாமல் குட்டநாட்டுத் திருப்புலியூர் எம் பெருமானுடைய திருநாமங்களையே வாய்வெருவா நின்கின் றாள் என்பது தோன்ற திருப்புலியூர் அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்’ என்கின்றாள். அவள் நிலை தனக்கு அப்போது தான் தெரியு ம்என்பது தோன்ற அன்னை மீர் இதற்கு என் செய்கேன் என்கின்றாள். இந்த எம்பெருமான் எழுநதருளியருக்கும் திருப்பதியைச் சதா புகழ்ந்து கொண்டிருக்கின்றாள் தலைவி என்பதனை 26. பிரான்-உபகாரகன் 27. நாச், திரு - 11:2