பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெம்மாங்கு 33 இலக்கியத்தில் இப்படி வருவது அரிது. ஆனால் உலகில் இவ் வாறு வெந்து மனம் புண்ணுகும் மெல்லியலார் இருக்கிருர்கள். அவர்கள் வாழ்வை உள்ளபடியே எடுத்துக் காட்டுகிறது இந்தத் தெம்மாங்கு. மற்ருெரு பெண், களவுக் காதலில் ஈடுபட்டிருக்கிருள். இராக் காலத்தில் அவளைத் தேடிக் கொண்டு அவள் காதலன் வருவது வழக்கம். அன்று அவனே எதிர்பார்த்திருக்கிருள். அவனே யாரும் அறியாமல் சக்திக்க வேண்டும். அதற்கு இடையூருக நிலாப் பால் போலக் காய்கிறது. அது கண்டு அப் பெண் வருந்துகிருள். இத்தகைய காட்சியை இலக்கியங்களிலும் காணலாம். சிலவு வெளிப்பட வருந்தல் என்பது அந்தத் துறைக்குப் பெயர். ' கருங்கால் வேங்கை வியுகு துறுகல் இரும்புலிக் குருளேயின் தோன்றும் காட்டிடை எல்லி வருநர் கள விற்கு நல்ல அல்லே நெடுவெண் ணிலவே ' என்ற பாட்டைப் பாடியதல்ை ஒரு புலவர் நெடுவெண்ணிலவிஞர் என்ற பெயரையே பெற்றிருக்கிரு.ர். சின்னஞ் சிறிய ஊரில் நிலவைக் கண்டு வருந்திய இளம் பெண், அந்த நிலாவை வேண்டிக் கொள்வதாக ஒரு தெம்மாங்கு வருகிறது. அவள் மிகவும் பணிவோடும், 'சாமி!” என்று மரி யாதையோடும் கிலாவை அழைக்கிருள். திங்களும் ஒரு தெய்வக் தானே? நீ கொஞ்சம் மறைந்துகொண்டால் ஆகாதோ? என்று அவள் கேட்கிருள். வெள்ளைவெள்ளே நிலாவே.சாமி வெளிச்சமான பால் நிலாவே கள்ள நிலாவே நீ . கருக்கலிட்டால் ஆகாதோ? . இந்தத் தெம்மாங்கை இயற்றியவன், ரெயிலும் தந்தியும் வந்த காலத்தில் வாழ்கிறவன். ஆதலின் அவற்றைப் பற்றிய செய்தி களே வியப்போடு சொல்கிருன்: . . வண்டியும் வருகுதடி-குட்டி வடமதுரை டேசனிலே தந்திபோய்ப் பேசுதடி-குட்டி தம்புசெட்டி மெத்தையிலே. 1. குறுந் 41, 2. மல. ப. 4:1. 3. ப. 4:18, u: &–3 - . 3