பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழிலாளர் பாட்டு 41 காடுகரை இங்கே இருக்கத்-தங்கமாமாவே காணுதசீமை ஏன்போகப்-பொன்னுமாமாவே 2. என்று அவள் கேட்கிருள். அவன் அவளே அழைத்துப் போவதன் நோக்கம் இன்ன தென்று அவனுடைய பேச்சிலே தெரிந்து விடுகிறது. பிள்ளே பெறும் காலத்திலே தங்கம் தையலாளே பிள்ளேரூவா அஞ்சுவேறே.பொன்னு குயிலாளே” என்று அவன் ஆசை காட்டுகிருன். அவள் பளிரென்று விடை கூறுகிருள்; கன்னத்தில் அடித்தாற்போல் கேட்டு விடுகிருள். கலியாணம் பண்ணுமுந்தித்-தங்கமாமாவே கன்னிகுளி குளிப்பாளா.பொன்னு மாமாவே!" சந்தை வியாபாரம் என்னும் தலைப்பில் வரும் பாடல்களில் ஒரு காதலி ஒவ்வோர் ஊர்ச் சங்தையில் ஒவ்வொரு பொருளாக வாங்க வேண்டுமென்று சொல்லி அடுக்குகிருள். அவ்வளவையும் வாங் கித் தாலி கட்டவேணும் என்று முடிக்கிருள். காதலன் அவ்வள வையும் வாங்கித் தந்து, ஊர் நாடெல்லாம் அறிய ஒழுங்காத் தாலி யும் கட்டலாம்' என்று சொல்லுகிருன். இங்கே பல ஊர்களின் பெயர்கள் வருகின்றன. பெண்ணின் கூற்றில் ஒவ்வொரு கண்ணிக்குப் பின்னும், - என்ன செய்யலாம் மாமா.நாம் ஏது செய்யலாம் மாமா? , r என்பதும், ஆணின் கூற்றில் ஒவ்வொரு கண்ணிக்குப் பின்னும், இன்னும் என்ன வேணும் பெண்ணே-உனக் கேது வேணும் கண்ணே? என்பதும் ஈரடிமேல் வைப்பாக இருக்கின்றன. 5. தொழிலாளர் பாட்டு கூலி வேலை செய்யும் பெண்களும் ஆண்களும் பாடும் பல வகைப் பாடல்களே இப்பகுதியில் காணலாம். சுண்ணும்பு குத் தும் ஏழைப் பெண்களின் அவலத்தை முதலில் பார்க்கிருேம், அவர்களுக்கு மணிக்கட்டெல்லாம் கோகின்றன, அவர்களுடைய வயிற்றில் பசி மூளுகிறது. uSuS