இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30
உண்மையான கவிஞனின், படைப்பாளியின் இயல்புகள் ஆகும்.
இவற்றை மலையருவி பெற்றிருக்கிறார். எனவே அவர் மேலும் முன்னேறுவார், வளர்ச்சி அடைவார், புதியன படைத்துத் தருவார் என்று எதிர் பார்க்கலாம்.
கவிஞரே நம்பிக்கையுடன் உறுதியாய் சொல்கிறார்...
எடுக்கக் குனிந்தவன்
நிமிரத்தான் போகிறேன்.
எதைத் தேடி வந்தேனோ அதை
எடுக்க வேண்டாமா?
எடுக்கக் குனிந்தவன்
நிமிரத்தான் போகிறேன்.
அவருடைய நம்பிக்கை வாழ்க! கவிஞரின் ஆற்றலும் உழைப்பும் வெற்றி பெறட்டும் என்று வாழ்த்துகிறேன்.
10-7-85
சென்னை -14
வல்லிக்கண்ணன்