பக்கம்:மழலை அமுதம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சிட்டுக்குருவி


      குழந்தை:"சிட்டுக் குருவி சிட்டுக் குருவி
                  சேதி சொல்லுவாய்
              எட்டுத் திசையிலும் என்னென்ன சேதி              
                  எனக்குச்சொல்லுவாய்"
             
       குருவி: "பட்டுக் குழந்தை பட்டுக் குழந்தை
                 பாட்டுப் பாடுவோம்
               கெட்ட கவலைகள் கிட்ட வராது
                  பாட்டுப் பாடுவோம்"  
 
     குழந்தை:"பாட்டு வேண்டாம் கதையைச் சொல்லு
                 கேட்டுப் பார்க்கலாம்"
       குருவி :"அங்கொரு வீட்டில் கூடு கட்டினேன்
                 அதனைச் சொல்லுவேன்
               தங்கமாய்ப் போற்றி என்னைக் காத்தனர் 
                 தாயன்புடன் வளர்த்தார் 
               கூடு கட்டியே முட்டையும் வைத்தேன்
                 குஞ்சுகள் தோன்றின 
               தேடி உணவை ஒடிக் கொணர்ந்தேன்
திக்கெட்டும் போய்ப் பறந்தேன்"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மழலை_அமுதம்.pdf/20&oldid=1073828" இலிருந்து மீள்விக்கப்பட்டது