பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவையான சில பிரச்சினைகளை பேசுவது மாத்திரமல்லாமல் எனக்கு மிகமிகத் தேவையாக இருக்கின்ற உங்களையெல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பினை நான் பெற்றிருக்கின்றேன். நான் உங்களையெல்லாம் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே என்று அழைக்கும்போது நீங்கள் மாத்திரம் உணர்ச்சி வயப்படவில்லை. மகிழ்ச்சி அடையவில்லை. நான் எந்த அளவிற்கு உணர்ச்சி வயப்படுகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நன்கறிவீர்கள். இன்று சிங்கப்பூரில் நடைபெறுகின்ற இந்த விழா மேடையில் எனக்கொரு புது அனுபவம். எப்போதும் நான் பேசுகின்ற விழா மேடையானாலும், மாநாடு ஆனாலும் மேடையிலே பல தலைவர்கள் இருப்பார்கள். அமைச்சர்கள் வீற்றிருப்பார்கள். எங்கள் கட்சியின் முன்னணித் தளபதிகள் வீற்றிருப்பார்கள். இன்று என்னைத் தன்னந்தனியனாக மேடையிலே நிறுத்தி நீங்கள் வேடிக்கை பார்க்கிறீர்கள். என்னை நீங்கள் தன்னந்தனியனாக நிறுத்தினாலும் உங்களை நான் தன்னந்தனியனாக ஆக்கமாட்டேன் என்று உறுதியை இந்த நல்ல நிகழ்ச்சியில் தெரிவித்துக் கொள்கிறேன். (கைதட்டல்). மாமழை போற்றுதும், மாமழை போற்றதும் என்று சிலப்பதிகார வரிகள் செப்புவதைப் போல இன்றைக்கு சிங்கப்பூர் தமிழர்கள் பலர் அந்த வரிகளை மாற்றி மாமழை தூற்றுதும், மாமழை தூற்றுதும் (பலத்த கைதட்டல்) என்று கூறுகின்ற அளவிற்கு வரவேண்டுமென்று நினைத்த இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெருங்குடி மக்கள் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். ஆனால், இந்த மழையிலும் நான் உங்கள் அன்பு மழையில் நனைவதற்கு 2