பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

யெல்லாம் சுட்டிக்காட்டி, "இத்தகைய பொருள்களை எல்லாம் படைத்தது யார்? அவனுடைய உண்மையை இந்தப் பொருள்கள் உணர்த்தவில்லையா?” என்று சொல்வார்கள், பெருமானார் அவர்கள்.


9. நம்பிக்கைக்கு உரியவர்கள்

இளமை முதல் உண்மை, விசுவாசம், நம்பிக்கை முதலான உயரிய குணங்கள் பெருமானார் அவர்களிடம் அமைந்திருந்தன.

உண்மை பேசும் அவர்களுடைய புகழ் எங்கும் பரவியிருந்தது.

நம்பிக்கையிலும் அவ்வாறே உயர்வு பெற்றிருந்தார்கள்.

மக்காவிலுள்ள மக்கள், பெருமதிப்புடைய பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் பொருட்டுப் பெருமானார் அவர்களிடம் கொண்டு வந்து கொடுப்பார்கள்.

அப்பொறுப்பை பெருமானார் அவர்கள் மிக நாணயமாக நிறைவேற்றினார்கள்.

ஆகையால், "நம்பிக்கைக்கு உரியவர்" "உண்மை பேசுபவர்” என்னும் பொருள்