இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
24
மாமி மகள் ஜைனப நாச்சியாரையும் அவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள் பெருமானார்.
ஒரு சமயம் பெருமானார் அவர்கள், ஹிரா குகையில் ரமலான் மாதம் திங்கட்கிழமை ஆண்டவனுடைய வணக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
அப்பொழுது பேரொளி ஒன்று உதயமாயிற்று; ஓருருவம் தோன்றி, "முஹம்மதே! ஓதுவீராக!" என்று கூறியது.
உடனே பெருமானார் அவர்கள் "நான் ஓதுபவன் அல்லனே (எனக்கு ஒதத்தெரியாதே)" என்று கூறினார்கள்.
அப்பொழுது அந்த தேவதூதர் அரபி மொழியில் வேத வசனங்கள் சிலவற்றை ஓதினார்.
அவற்றின் கருத்து:
"எல்லாவற்றையும் படைத்த இறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக! அவனேதான் மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் மாபெரும் கொடையாளி. அவனே எழுதுகோல் மூலமாகக் கற்றுக்கொடுத்தான்: மனிதனுக்கு அவன்