இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
50
அப்பொழுதும் அப்பெண்மணி பெருமூச்செறிந்து "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்" என மீண்டும் கூறிவிட்டு, "பெருமானார் அவர்கள் எவ்வாறு இருக்கின்றனர்?" என்றே கேட்டார்.
"பெருமானார் அவர்கள் நலமாக இருக்கின்றார்கள்" என்ற சொற்களைக் கேட்டவுடன் அவருடைய கவலை பறந்தோடிவிட்டது.
போர்முனைக்கு வந்து பெருமானார் அவர்களின் திருமுகத்தைப் பார்த்ததும் தம்மை மறந்து, “தாங்கள் இருக்கும்போது எவ்வளவு துன்பங்கள் வந்தபோதிலும் அவை எங்களுக்கு ஒரு பொருட்டல்ல; நானும் என் தந்தையும், என் சகோதரரும், என் கணவரும் தங்களுக்கு அர்ப்பணமாகி விட்டோம். ஆண்டவனுடைய திருத்தூதரே! தங்களைப் பெற்றிருக்கும்போது கேவலம் நாங்கள் என்ன?” என்று கூறினார்.
மற்றஇரு கூட்டத்தினர் முன்போலவே, பெருமானார் அவர்களிடம் வந்து தங்கள் கூட்டத்தார் இஸ்லாத்தைத் தழுவி இருப்பதாகவும், அவர்களுக்கு மார்க்க