பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

முனாபிக்குகள் தப்பித்துச் செல்ல வழி பார்த்தார்கள். தங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்று இருக்கின்றன என்றும் "அவற்றைப் பாதுகாக்க தாங்கள் போக வேண்டியது அவசியம்" என்றும் காரணம் கூறி, பின்வாங்கிச் செல்லத் தொடங்கினார்கள்.

ஆனால், பகைவர்களின் மிகுந்த படை பலத்தைக் கண்டு, உண்மையான முஸ்லிம்களுக்கு ஊக்கம் அதிகரித்தது.

முற்றுகை கடுமையாக இருந்தது. அப்போது சில வேளைகளில் நபி பெருமானாரும் தோழர்களும் தொடர்ந்து மூன்று வேளையும் பட்டினிக் கிடக்க நேரிட்டது.

ஒருநாள், தோழர்களில் சிலர் பசியினால் வாடி வருந்திப் பெருமானார் அவர்களிடம் வந்து தங்கள் வயிற்றைத் திறந்து காட்டினார்கள். ஒவ்வொருவருடைய வயிற்றிலும் ஒரு கல் வைத்துக் கட்டப்பட்டிருந்தது.

அப்போது பெருமானார் அவர்கள் தங்கள் வயிற்றைக் காட்டினார்கள். அதில் மூன்று கற்கள் வைத்துக் கட்டப்பட்டிருந்தன.