பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

இறுதியாக, அபூதாலிப் அவர்கள், "நான் பணக்காரன் அல்லன் எனினும் இக்குழந்தையை வளர்க்கும் நற்காரியத்துக்கு நான் தகுதியானவன் என்று நீங்கள் கருதினால், நான் மனப்பூர்வமாக அப்பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்” என மிகப் பணிவோடு வேண்டிக்கொண்டார்.

அதைக்கேட்டதும், "இதற்கு நீ பொருத்தமானவன் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. ஆயினும் அந்தக்குழந்தையே அதைத் தீர்மானிக்கட்டும்" என்று கூறி, பெருமானார் அவர்களை அருகில் அழைத்து, "அருமைக் கண்மணியே! எனக்கோ வயதாகிவிட்டது. உடலும் தளர்ந்து விட்டது. இனி அதிக நாட்கள் உயிரோடு இருக்கமாட்டேன். ஆகவே, நம் குடும்பத்தவர்களான, இவர்கள் உம்மைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்கத் தயாராயிருக்கின்றனர். இவர்களில் எவருடன் இருக்க நீர் விரும்புகிறீர்?" என்று கேட்டார் முதியவர்.

புன்சிரிப்புத் தவழ, அபூதாலிப் அவர்கள் மடியில் போய் உட்கார்ந்தார்கள் பெருமானார்!

உடனே அப்துல் முத்தலிப் கண்களில் நீர் தளும்ப, தம் மகனை நோக்கி, "அபூதாலிபே!