பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69


அதனால், குறைஷிகள் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளானார்கள். தங்களுக்குக் கோதுமை அனுப்புமாறு துமாமாவுக்கு கட்டளையிட வேண்டும் என பெருமானார் அவர்களை மிகவும் வேண்டிக் கொண்டனர்.

கடுமையான பகைவர்களின் வேண்டுகோளை, கருணை மிக்க பெருமானார் அவர்கள் மறுக்காமல், துமாமாவுக்குச் சொல்லி அனுப்பினார்கள். வழக்கம்போல் அவர்களுக்குக் கோதுமை கிடைத்தது.

குறைஷிகளுக்கு எவ்வளவு தயை காட்டினாலும் அவர்களோ பகைமையைக் கைவிடுவதாக இல்லை,


41. உண்மையும் நாணயமும் உள்ளவர்

பெருமானார் அவர்களின் மருமகன் அபுல் ஆஸ் அப்பொழுதும் முஸ்லிமாகாமல் இருந்தார்.

பத்ருப் போரின்போது சிறைப்படுத்தப்பட்ட குறைஷிகளில் அபுல் ஆஸும் ஒருவர். அவருடைய மனைவியும் பெருமானார் அவர்களின் மகளுமான ஸைனபை மதீனாவுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்ற நிபந்தனையின் மீது அபுல் ஆஸ் விடுதலை செய்யப்பட்டார்.