பக்கம்:மாணவர்களுக்கு நபிகள் நாயகம் வரலாறு.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

54. தருமம் செய்துவிடுங்கள்

ஆயிஷா நாச்சியார் அவர்களிடம் நாணயங்கள் சிறிது இருப்பது பெருமானார் அவர்களுக்கு நினைவு வந்தது. எனவே அவர்களை அழைத்து; "ஆயிஷாவே! அந்த நாணயங்கள் எங்கே இருக்கின்றன? ஆண்டவனிடம் நம்பிக்கை இல்லாமலா முஹம்மது அவனைச் சந்திப்பது? போய் அவற்றை ஆண்டவனுடைய வழியில் தருமம் செய்து விடும்" என்று பெருமானார் அவர்கள் நோய் கடுமையாக இருந்த நிலைமையில் சொன்னார்கள்.

நாச்சியார் அவர்களும் அவ்வாறே தருமம் செய்து விட்டார்கள்.


55. பெருமானார் அவர்களின் பிரிவு

பெருமானார் அவர்களுக்கு நோய் மிகுந்தும் குறைந்தும் காணப்பட்டது.

ஹிஜ்ரீ பதினோராவது வருடம் ரபீயுல் அவ்வல் மாதம் பன்னிரண்டாம் தேதி திங்கட்கிழமை காலையில் பெருமானார் அவர்களுக்கு வெளித்தோற்றத்தில் உடல் நலமுடன் இருப்பதாகத் தெரிந்தது.