இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
95
அவர்களின் கைகள் இரண்டு பக்கங்களிலும் ஒழுங்காய் அமைந்திருந்தன. கண்கள் மூடின. அவர்கள் உயிர் உலகை விட்டு நீங்கிப் பரிசுத்த உலகுக்குச் சென்று விட்டது.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
மனிதத் தந்தையான ஹல்ரத் ஆதம்(அலை) அவர்களின் காலத்திலிருந்து, இவ்வுலகை நேர்வழிப்படுத்துவதற்காகக் காலந்தோறும் ஆண்டவன் தீர்க்கதரிசிகள் பலரை அனுப்பி வந்திருக்கின்றான். அவர்களில் கடைசியாகத் தோன்றியவர்கள் பெருமானார் அவர்கள். தங்களுக்குப் பிறகு, உலகுக்குத் தீர்க்கதிரிசிகள் தோன்றுவதற்கு அவசியம் இல்லாதபடி, தங்கள் திருப்பணிகளைச் செவ்வனவே பூர்த்தி செய்துவிட்டார்கள்.
பெருமானார் அவர்கள், உலகத்தில் மனிதர்களின் தோழமையோடிருந்து, அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவர நிறைவேற்றி, அவர்களை உன்னதமான இடத்தில் உயர்த்தி