பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

41



போ, போர்க்களத்திலும் அதியமான் புரவலனாகவே காட்சி தருவான். உன் மட்பானை என்றும் நிறைந்து வழிய அவன் அருள் புரிவான்.

உலகத்தின் வறுமையைத் தீர்க்கும் செல்வம் படைத்த அவனுக்கு, உன் வறுமையைத் தீர்ப்பதா கடினம்?

மகனே, உன்னை வாழ்த்துகிறேன், போ என்றாள் ஒளவை.

விறலி, காவடித் தண்டைத் தூக்கினாள் அவள் கை வளைகள் கிளு கிளுத்தன, ஒளவையின் உள்ளம் குளுகுளுத்தது.


34. பாரியும் மாரியும்

“வாரும் புலவரே, வாரும்” என்றார் கபிலர். வந்த புலவரோ “புலவர் திலகமே வணக்கம்” என்றார்.

“வந்த காரியம் யாது?”

“பாரெல்லாம் புகழும் பறம்புமலை வள்ளலைப் பார்க்க வேண்டும். பாரி பாரி என்று நாவார வாழ்த்த வேண்டும்.

“பாரிதானா வள்ளல்?”

“கபிலர் கூற்றா இது?”

“இவன் ஒருவன்” தானா வள்ளல், உலகில் வேறு கொடையாளியே இல்லையா?