பக்கம்:மாணவர்களுக்கு புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவர்களுக்குப் புறநானுற்றச் சிறுகதைகள்

43



நாளும் நல்ல நாள். நிமித்தமும் நல்லதே. வார சூலையும் நமக்கு ஆதரவே.


36. போர்க் கலை தெரிந்தோர் உண்டோ?

“விறலியே, உன் நாட்டியக்கலை சிறந்தது என்பதை அறிந்தோம். ஆனால், உங்கள் நாட்டில் போர்க் கலை தெரிந்தோர் இருக்கின்றனரா? என்று அரசன் கேட்டார்,

அதற்கு விறலி, “கேளும் எங்க நாட்டிலே திணவெடுத்த தோளுடைய வீரர் பலர். அவர்கள் அடிபட்ட பாம்பு போல் சீறி எதிர்க்கும் ஆற்றலுடையோர். அவர்கள் மட்டுமா?

பொது இடத்தில் கட்டி தொங்கவிடப் பட்டிருக்கின்ற மணியில் காற்றானது மோதியடிக்க, அதனால் எழுகின்ற ஒலியைப் போர் ஒலி என்று, பூரித்துப் போருக்குப் புறப்படும் எங்கள் மன்னனும் இருக்கிறான்.

போதுமா?” என்றார் விறலி.


37. பார், பார் படைக் கருவி பார்!

தொண்டைமான் ஒளவையாரிடம் தன் படைக் கலன்களைக் காட்டி, அவற்றின் பெருமையை எடுத்துரைத்தான். அதியமானுக்குத் தூதாகச் சென்ற ஒளவை கூறினாள்:

“அரசே! நின் படைக் கலன்களைக் கண்டேன். இவை மாலை சூடிய மணமங்கை போல் காட்சியளிக்கின்றன.