112
வாழிய என்பதன் முன் வல்லினம்
11. வாழிய - கொற்ரு - வாழி கொற்ரு இதில் வாழிய என்னும் வியங்கோள் வினை முற்றின் யகர உயிர்மெய்
நீங்க, அதன் முன் வல்லினம் மிகாது இயல்பாயிற்று.
வாழி என்ற வியங்கோள் வினை முற்றின் முன் வரும் வல்லினம் இயல்பாகும்.” == -
பல, சில என்பவற்றின் முன் வல்லினம்
12. பல - பல - பலபல
சில -- சில - சிலசில
இவற்றில் பல. சில என்னும் இரு சொற்களும் தமக்கு முன்னே தாம் வந்து இயல்பாயின.
பல, சில என்னும் இரு சொற்களுக்கும் முன் தாமே வர இயல்பாகும்.”
ஆகாரத்தின் முன் வல்லினம்
13. ஆ + குறிது - ஆகுறிது . இவற்றில் ஆ. மா முன்
மா + குறிது - மாகுறிது வலி இயல்பாயிற்று. கேண்மியா-தேவா-கேண்மியா தேவா - இதில்
மியா முன் வலி இயல்பாயிற்று. உண்ணு+பன்றிகள்-உண்ணு பன்றிகள் - இதில் முற்று முன் வலி இயல்பாயிற்று.
'ஆ என்னும் பெயர்க்கும், மா என்னும் பெயர்க்கும், மியா என்னும் முன்னிலையசை இடைச் சொல்லுக்கும், ஆகார வீற்று எதிர்மறைப் பலவின்பால் வினை முற்றுக் கும் முன்னே வரும் வல்லினம் இயல்பாகும்.”