17
இவ்வாறு வடமொழிச் சொற்கள் சிறிது திரிந்து அவற்ருேடு சம்பந்தப்பட்ட பொருளை உணர்த்து
வதுண்டு. அவ்வாறு உணர்த்துவது தத்திதாந்த நாம
மாகும்.
"ஒரு வடசொல் சிறிது வேறுபட்டு அதோடு தொடர்புடைய ஒரு பொருளை உணர்த்தி நிற்பதே தத்தி தாந்த நாமமாகும்.”
4. திசைச்சொல்
1.
2.
வற்றம் - இது பசுவைக் குறிக்கும் சொல். தென் பாண்டி நாட்டுச் சொல்.
தள்ளை - இது தாயைக் குறிக்கும் குட்டநாட்டுச்
சொல்.
அச்சன் - இது தந்தையைக் குறிக்கும் குட நாட்டுச் சொல். - - - கையர் - இது வஞ்சகரைக் குறிக்கும் கற்கா நாட்டுச் சொல்.
கிழார் - இது தோட்டத்தைக் குறிக்கும்
வேளுட்டுச் சொல்.
பாழி - இது சிறு குளத்தைக் குறிக்கும் பூழி நாட்டுச் சொல்.
செய் - இது ఎlu&ుత குறிக்கும் பன்றி நாட்டுச்
சொல்.
• கேணி - இதுவும் சிறு குளத்தைக் குறிக்கும் அருவா நாட்டுச் சொல்.
எகின் - இது புளியைக் குறிக்கும் அருவா வடதலை நாட்டுச் சொல். -