இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
44
"யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும்,
சின், குரை, ஒரும், போலும், இருந்து, இட்டு, அன்று ஆம், தாம், தான், கின்று, நின்று - என்பவை எல்லா விடத்தும் வரும் அசைச் சொற்களாம்.”
குத்திரம்:
“யா கா பிற பிறக்கு அரோ போ மாது இகும்
சின் குரை ஒரும் போலும் இருந்து இட்டு அன்று ஆம் தாம்தான் கின்று நின்று அசைமொழி.'
17. உரிச்சொல் (தட, வை)
வலிதுஞ்சு தடக்கை - இதில் தட' என்பது உரிச்
சொல். இது பெருமை என்ற பொருளில் வந்தது.
--- வைநுனைப் பகழி - இதில் வை’ என்பது உரிச்
சொல். இது கூர்மை என்ற பொருளில் வந்தது.
'தட என்ற உரிச்சொல் பெருமை என்ற பொருளி லும், வை என்ற உரிச்சொல் கூர்மை என்ற பொருளி லும் வரும்.”