75
கூதிர்க்காலம்: ஐ ப் ப சி யும், கார்த்திகையும் கூதிர்க்காலமாம்.
முன் பனிக்காலம்: மார்கழியும், தையும் முன் பனிக் காலமாம்.
பின் பனிக்காலம்: மாசியும், பங்குனியும் பின்
பனிக்காலமாம். --
சிறு பொழுது: இது மாலை, யா ம ம், வைகறை, காலை, நண்பகல், பிற்பகல் அல்லது எற்பாடு என்று ஆறு வகைப்படும்.
மாலை: இரவின் முதற் பத்து நாழிகை நேரமே மாஆலயாம். (மாலை 6 மணியிலிருந்து 10 மணி முடியவுள்ள நேரம்) s
யாமம்: இரவின் இரண்டாம் பத் து நாழிகை நேரமே யாமமாகும். (இரவு 10 மணியிலிருந்து 2 மணி முடியவுள்ள நேரம்).
வைகறை: இரவின் மூன்ரும் பத் து நாழிகை நேரமே வைகறையாம். (இரவு 2 மணியிலிருந்து 6 மணி முடியவுள்ள நேரம்)
காலை: பகலின் முதற்பத்து நாழிகை நேரமே காலையாம். (பகல் 6 மணியிலிருந்து 10 மணி முடியவுள்ள நேரம்)
நண்பகல்: பகலின் இரண்டாம் பத்து நாழிகை நேரமே நண் பகலாம். (பகல் 10 மணியிலிருந்து 2 மணி முடியவுள்ள நேரம்).