பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 10.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


ஒழுகும் பேதைகள் எனப் புகழ்வது போல இகழ்ந்து கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறு கூறுவது வஞ்சகப் புகழ்ச்சி யணி. பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே. இதில் பாரியை உயர்த்திக் கூருதது போலக் கூறிப் பாரிக்கும் மாரிக்கும் இழிவில்லாத தன்மை கூறப்பட் டிருக்கிறது. இவ்வாறு கூறுவதும் வஞ்சகப் புகழ்ச்சியணி. "புகழ்வது போலப் பழித்தும், பழிப்பது போலப் புகழ்ந்தும் கூறுவதே வஞ்சகப் புகழ்ச்சி அணியாம்.”