26
அதுபோலவே இடைச்சி - என்பதில் ச் இடைநிலை
வண்ணுத்தி - என்பதில் த் இடைநிலை.
இவைகளெல்லாம் பெயர்ச் சொற்களில் வரும் இடைநிலைகளாம். (இதுபோல வினைச் சொல்லிலும்
வரும்.)
" ஒரு பெயர்ச் சொல்லில் பகுதியையும், விகுதியை யும் பிரித்தபின் இடையில் நிற்பதே இடை நிலையாம். இது பெயர்ப் பகுபத இடைநிலை என்று பெயர் பெறும்.
சூத்திரம்:
இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகு கி பகுத்து இடைநின்றதை வினைப் பெயர் அல்பெயர்க்கு இடைகிலே எனலே."
குறிப்பு: சாரியை, சந்தி, விகாரம் முதலியனவும், பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின் ருலும் அவைகளைத் தனியே பின்னல் கூறுவதால் அவை ஒழிந்த இதை இடைகிலே என்று கூறுவர்.
முக்காலம் வினைப்பகுபத இடைநிலை
நான் சென்றேன் - இதில் சென்றேன்' என்பது வினைச் சொல். இது செயல் கழிந்ததைக் காட்டுகிறது. ஆகவே இது இறந்த காலம்.
நான் செல்கின்றேன் - இதில் செல்கின்றேன். என்பது வினைச் சொல். இது செயல் நடக் கிறதைக் காட்டுகிறது. ஆகவே இது கிகழ் காலம்.