34
'அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து அம், தம், நம், தும், ஏ. அ, உ, ஐ. கு, ன் என்ற பதி னேழும் பொதுச் சாரியைகளாம். மேலும் தன். தாம். ஆம், ஆ, து முதலியவைகளும் இ ைவ போன்றவை
களும் சாரியை களாக வரும்'
சூத்திரம்:
"அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம்
தம் நம் நும் ஏ அ உ ஐ கு ன இன்ன பிறவும் பொதுச் சாரியை யே'.
சந்தி
நடந்தனன்- இதில் நட' பகுதி, 'அன்' விகுதி,
'த் இடை நிலை, 'அன்' சாரியை, ‘ந்’ சந்தி. இது
பகுதிக்கும் இடை நிலைக்கும் இடையில் வந்தது.
படித்தான்-இதில் (படி+த் +த்+ ஆன்)-தோன்றல் வந்தான் -இதில் (வா+(த்)ங்+த்+ஆன்)-திரிதல் நடவான் -இதில் (நட+வ் + ஆ + ஆன்)-கெட்டது
'பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே வருகின்ற தோன்றல், திரிதல். கெடுதல் ஆகிய மூன்று விகாரங் களும் சந்தியாம். இது எல்லாப் பகுபதச் சொற்களிலும் இராது".
விகாரம்
திட்பம் - இதில் திண்மை என்பது பகுதி அது திண் என்ருகி திட்பம் என்ருயிற்று. இது மெல்லினம் வல்லினமான விகாரம்.