60
பேசின்ை. கடகடவென்று சிரித்தான் - இவற்றிலுள்ள
மழ மழ, கடகடவென்ற இரட்டைச் சொற்களும்
பிரிந்து ஒலிக்கா.
'இரட்டிப் பினின்றும் பிரிந்து தனித்து ஒலியாத
சொற்களே இரட்டைச் சொற்களாம்.'
அடுக்குத் தொடர்
அன்றே அன்றே-இதில் அன்று என்ற சொல் இருதடவைகள் வந்து பொருளில்லாது நிற்றலால் இது அசைநிலை.
போ போ போ போ - இதில் போ என்ற சொல் நான்கு தடவைகள் வந்திருக்கின்றது. இ வ் வா று வருவது விரைவு.
எறி எறி எறி - இதில் எறி என்ற சொல் மூன்று தடவைகள் வ ந் தி ரு க் கி ன் ற து . இவ்வாறு வருவது கோபம்.
வாழ்க வாழ்க - இதில் வாழ்க என்ற சொல் இரு தடவைகள் வந்துள்ளன. இ வ் வா று வருவது மகிழ்ச்சி.
பாம்பு பாம்பு பாம்பு- இதில் பாம்பு என்ற சொல் மூன்று தடவைகள் வ ந் து ஸ் ள து . இவ்வாறு வருவது அச்சம்.
வாழேன் வாழேன்- இதில் வாழேன் என்ற சொல் பல தடவைகள் வந்துள்ளது. இவ்வாறு வருவது துன்பம்.
ஏ ஏ இவளொருத்தி பேடி- இதில் ஏ என்ற சொல் பல தடவைகள் வந்துள்ளது. இவ்வாறு வருவது இசைநிறை.