85
1. குறளடி
திரைத்த சாலிகை
நிரைத்த போனிரைந்
திரைப்ப தேன்களே
விரைக்கொண் மாலையாய்
இப்பாவின் அடிகள் நான்கில் ஒவ்வொன்றும் இரு சீர்களைக் கொண்டிருக்கின்றது. ஆகவே இதில் உள்ள ஒவ்வோர் அடியும் குறளடியாகும்.
" இரு சீர்களால் வருவதே குறளடியாம்."
2. சிந்தடி
இருது வேற்றுமை இன்மையாற் கருதி மேற்றுறக் கத்தினே னரிது வேற்றுமை யாகவே கருது வேற்றடங் கையினய் இப்பாவின் அ டி க ள் நான்கில் ஒவ்வொன்றும் மூன்று சீர்களைக் கொண்டு இருக்கின்றது. ஆகவே இதிலுள்ள ஒவ்வோரடியும் சிந்தடியாம்.
' மூன்று சீர்களால் வருவதே சிந்தடியாம்."
3. அளவடி
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்-செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணுயி னர். இப்பாவில் முதல் மூன்று அடிகளில் ஒவ்வொன்
றும் நான்கு சீர்களைக் கொண்டிருக்கின்றது. ஆகவே
அவைகளில் ஒவ்வொன்றும் அளவடியாம்.
" நான்கு சீர்களால் வருவதே அளவடியாம்.'