Joseph
________________
96 கேள்விகன் 1. ரகர றகர மெய்களுக்குரிய பெயர் என்ன? 2. ரகர றகர மெய்களின் தன்மை என்ன? பயிற்சி-24 கீழ் வருவனவற்றைத் திருத்தி, அவ்வாறு திருத்தி யதற்குக் காரணமும் கூறுக:- இயற்க்கை விற்க்கப்படும், நாற்க்காமி, தயிர்குடம், தேர்தட்டு, நார்பெட்டி, வார்சேணம். தோர்கருவி, ஏற்ப்பாடு,காற்ப்பங்கு, சொற்ச் சோர்வு அன்னுவயம் 4. பாட்டில் சொற்கள் நேராக பொருள் கொள் ளும்படி அமைவதில்லை. முன்னே இருக்கவேண்டிய சொற்கள் பின்னேயும், பின்னிற்கவேண்டிய சொற்கள் முன்னேயும் அமைந்து வரும். சொற்கள் முன் பின் னாக இருப்பின், அவற்றைப் பொருளுக்கு ஏற்ப கொண்டு கூட்டி முடிக்க வேண்டும். அவ்ளாறு செய் வதை இலக்கணத்தில் அன்னுவயம் என்பர். (உ-ம்) 'நன்றி மறப்பது நன்று அன்று' சொற்கள் நேராக நின்று பொருள் தருகின்றன. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்- இதை நல்லொழுக்கம் நன்றிக்கு வித் தாகும்' என்று கொண்டு கூட்டிப் பொருள்படுத்த வேண்டும்.