125 2. தொழிற்பெயர்படர்க்கை இடத்தில்மட்டும்வரும். வினையாவனையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடத்திலும் வரும். கேள்விகள் 1. வினையாலணையும் பெயராவது யாது ? 2. தொழிற்பெயர்க்கும்வினையால்ணையும்பெயர்க்கும் உள்ள வேறுபாடு யாது ? பயிற்சி.9 2. அடைக்கலம் பகர்கின்ருனைக் காண். வந்தேனுக்கு முன்னே அருள். நடந்தவன் கால்கள் நோகும். அன்பர் உள்ளம் அமர்ந்தவனே. செய்தவன்கண் சென்றேன். இருந்தேனுக்கு எங்கே இடம்? - இவற்றுள் வினே யால் அணையும் பெயர்கள் எவை 2. மடித்தாள் செய்தது. வருகின்ருர், கண்டனன். ஒடினஇவ்வினைமுற்றுக்களை வினையாலணையும் பெயர்களாக மாற்றி வாக்கியங்களில் அமைக்க. வேற்றுமை 33. பெயர்ச்சொற்களின் பொருளே வேறுபடுத் துவது வேற்றுமையாம். அ.து எட்டு வகைப்படும். 40. முதல் வேற்றுமை என்பது, பெயர்ச்சொல் ஒரு வேறுபாடும் இல்லாமல் வருவது. இதற்கு எழு வாய் வேற்றுமை என்றும் பெயராம். இது வினைப் பயனிலையையும், பெயர்ப் பயனிலையையும், வினப் பயனிலையையும் கொண்டு முடியும்.
பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/130
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை