பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராதனைகள் அவற்றில் இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்த, மெய்ப்பிக்க, நிரூபிக்க - அவர் தான் திரட்டியக் கருத்துக்களை நூற்களாக அச்சிட்டு இலவசமாக வழங்கினார். எனவே, நாம் இராஜா ராம் மோகன் ராய் அல்லவே என்கிறோம்.

இந்த நூலை ஒவ்வொரு ஐந்தாம் வகுப்பு மாணவன் முதல் உயர்நிலைக் கல்வி கற்கும் மாணவர்கள் வரைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பை, பள்ளி ஆசிரியர் பெருமக்களும், பெற்றோர் எனும் சான்றோர்களும் மாணவ மணிகளுக்கு உருவாக்கும் சான்றாண்மை பெறுவார்களேயானால், அந்த அரிய வாய்ப்பு, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடபோதனைச் செய்யும் போதும், தனிப்பட்ட வாழ்க்கை வளத்திற்கும், ஒர் ஊன்றுகோல் போல வந்து அவர்களது சிந்தனைகளிலே நிழலாடும் என்பது உறுதி.

அந்தப் பொறுப்பை, பள்ளி ஆசான்களும் - பெற்றோர் பெருமக்களும் மாணவ - மாணவிகளுக்கு வழங்கிட முன் வரவேண்டும் என்று நாம் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

வருங்காலப் பார்வையில் அறிவின் ஊற்றுக் கண்களாக மாணவர்கள் விளங்கிட, ஒவ்வொரு பெற்றோரும் கம்பர் பெருமானுக்கு உரமாக வாழ்ந்த சடையப்ப வள்ளல்போல உதவுவார்களே யானால், அந்த மாணவர் உலகம் இந்த வியன் உலகை வளமாக்கும் விண்ணிராக, மண்ணின் இந்த பெருமைக்குச் சுவையூட்டும் செம்புலப் பெயல் நீராக, தண்ணி வேட்கையைத் தணிக்கும் நன்னீராக, உண்ணிராக உலகுக்கு உதவும் என்பது உறுதி!

எனவே, ‘மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்' என்ற இந்தப் புத்தகம், எமனுக்கு வாகனம் எருமைக்கிடா என்று கூறும் மக்களது அறியாமையை அகற்றும் அறிவியல் அரிச்சுவடியாக விளங்குமா? என்பதை இந்த நூலைப் படித்தவர்கள்தான் எமக்கு அறிவுரையாக அறிவிக்க வேண்டும் என்பது எமது அவா!

நூலக வானில் விண்மீன்களொத்த சிறந்த நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் வள்ளலார் நூலகம் வெளியீடு இது.

மாணவர் உலகமும், பெற்றோர் திலகங்களும், சான்றாண்மைக்கு சான்றான பள்ளி ஆசான்களும், பொது மக்களும் இந்த நூலிலுள்ள கருத்துக்களைச் சீர்தூக்கிப் பார்த்து ஆதரவு தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதுவே இந்த புத்தக ஆசிரியனின் ஆசை.

அன்பன்

என்.வி. கலைமணி