பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை அருளிச் செயல்கள் 195


 குறித்துள்ளார். ஆனால், பாகவதத்திலுள்ள ஆதாரத்தை அவர் குறிக்கவில்லை. திருவெம்பாவையின் பாடல்கனை நோக்கும்பொழுது, மார்கழி மாதத்தில் கோகுலத்துப் பெண்கள் ஒருவரையொருவர் அதிகாலையில் துயிலெழுப்பி நீராடிக் கண்ணனைக் கணவனாக அடைய வேண்டியது போலவே, திருவண்ணாமலையிலுள்ள பெண்கள் ஒருவரை யொருவர் அதிகாலையில் துயிலெழுப்பி நீராடிச் சிவனடியாரைத் தம் கணவர்களாக அடையவேண்டும் என்று நோற்பதை உணர்த்துகின்றது. ஆகவே, இரண்டு பிரபந்தங்களும் காத்தியாயணி தேவியின் விரதத்தை உணர்த்துவ தாகவே கொள்ளலாம். பதினான்காம் திருவெம்பாவையில்

  பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் 
  பாதத் திறம்பாடிஆடேலோர் எம் பாவாய் (14) 

என்று பராசக்தியைச் சிறப்பாக வணங்கியுள்ளனர்.முன்னிக் கடலை (திருவெம் 16) என்ற பாடலில் பராசக்தி உவமையாகக் கூறப்பெற்றுள்ளாள். அன்றியும், திருவெம்பாவை யின் தலைப்பில் 'சக்தியை வியந்தது' என்ற குறிப்பும் காணப் பெறுகின்றது. இம்மூன்று காரணங்களாலும் திருவெம்பாவை சக்தியின் நோன்பைத்தான் குறிக்கின்றது என்ற கொள்கை வலியுறுகின்றது என்று பேராசிரியர் மு. இராகவய்யங்கார் அவர்களும் குறிப்பிடுவர்.

நாகான்காவதாக : இரண்டு பனுவல்களிலும் மகளிர் ஒருவரையொருவர் துயிலுணர்த்தும் காட்சிகள் கூறப்பெறு கின்றன. இவற்றுள் பல ஒற்றுமையாகவும் உள்ளன. ஒன்றை மட்டிலும் ஈண்டுகாட்டுவேன். கோகுலத்திலுள்ள பெண்கள் கட்டம் ஒன்று தோழி ஒருத்தியைத் துயில் எழுப்புவதற்காக அவள் வீட்டையடைகின்றது. முதல் நாள் அப்பெண்களிடம் "நாளை தானே வந்து உங்களை எழுப்புவேன்” என்று கூறினவள் அவள். அவள் இன்னும் எழுந்து கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவள் வீட்டையடைந்த கூட்டம்,