108 இ. புலவர் கா. கோவிந்தன்
தென்புல மருங்கில் தீதுதிர் சிறப்பின் மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் நிரைமணிப் புரவி ஓர்ஏழ் பூண்ட ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக் காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன்என மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்."
- - - சிலம்பு. 27; 127-138. செங்குட்டுவனும், வளவன்கிள்ளியும், வெற்றி வேற் செழியனும் கண்ணகியைப் பத்தினித் தெய்வ மாக்கி வழிபாடு செய்தனர் என்றால், இவரெல்லாம் தமிழகத்தவர், தமிழகத்துப் பெண்ணைத் தமிழகத்து அரசர்கள் பாராட்டியதில் பெருமையில்லை; "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்." என்பதற்கேற்ப, அவளை வேற்று நாட்டவர், வேற்று மொழியினர் பாராட்டியிருப்பராயின், அதுவே அவள் பெருமைக்கு அளவுகோலாம் என்று எண்ணுவதாயின், அந்தப் பெருமையும் அவளுக்கு வாய்த்திருந்தது. - தமிழகத்து மூவேந்தரைப் போலவே, மவுரியப் பேரரசன் அசோகன் ஆட்சிக்கு அடிபணியாது தனியரசு அமைத்து ஆண்டவரும், தொடக்கத்தில் துளுநாடு என்ற எல்லை குறுகிய நாட்டவராய் இருந்து, தமிழகத்துப் பேரரசர்களெல்லாம் அஞ்ச, தமிழகத்து அரசியலில் பெரும்பங்கு கொண்டு, இறுதியில், அப்பேரரசர் படையில் பணியாற்றியவரும், சொல்