பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள் *

என்றால், புகழ்பெறும் பெண்ணின்பால், புகழும் பெண் உள்ளத்தின் காழ்ப்புணர்வுகளையும் கெடுத்து, அவ் உள்ளத்தைத் தன்பால் ஈர்க்கவல்ல சிறந்த பல பண்புகள்அமைந்திருத்தல் வேண்டும். பெண்ணுலகில், ஒரு பெண்ணின் பாராட்டைப் பெறுவதற்கே ஒரு பெண் . அத்துணைச் சிறந்தவளாகவேண்டின், அவளைப் பெண்ணுலகின் பெரும்பகுதி புகழவேண்டு மாயின், அவள்பால் பொருந்தியிருக்க வேண்டிய சிறப்புகளின் பெருமையைப் பண்புகளின் பெருக்கை அளவிட்டுக் கூற இயலுமோ? அவ்வாறு புகழும் பெண்களும் ஏனைய பெண்கள் போன்றவராகாது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையால் உலகோர் போற்றும் உயர்வுடையராயின், அவர்களால் பாராட்டுப் பெறும் அப்பெண், ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய தெய்வத்திரு மாமணியாய்த் திகழத் தக்கவளேயாதல் வேண்டும். -

கண்ணகியின் கதை கூறவந்த ஆசிரியர்

இளங்கோவடிகளால் அவளையும், அவள கணவனையும் அறிமுகம் செய்துவைக்கும் முதல் நிலையிலேயே, அத்தகைய உயர்வை. - ஏன் - அதனினும் சிறந்த உயர்வைக் கண்ணகிக்கு ஏற்றிப் போற்றியுள்ளார். கண்ணகி கோவலன் என்ற

இருவரையும் பற்றிய காப்பியம் இயற்ற வந்த ஆசிரியர், அவ்விருவருள் ஆடவன் என்ற உயர்வுடைமையை உன்னி, அவன்ையே முதற்கண் அறிமுகம் ஆக்குதல் வேண்டும். ஆனால், அடிகளார், அவ்வாறு செய்யாது,