பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் ಉranjaLmir ઉ ss

"Frá Hr எடுத்துக் கூறியதோடு நில்லாமல், அதை உறுதி செய்யப் பண்டு நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியையும் எடுத்துக்கூறி விளக்கவும் செய்தார்.

இறுதியாக, தவத்தோர் தரும் சிறுபொருள் பெற்றவர்களே அத்துணைப் பெரும் பயன் அடைவராயின், அடைக்கலப் பொருளாகக் கற்புடைத் தெய்வத்தையே கொண்டு செல்லும் நீ எத்துணைப் பெரும்பயன் அடைவையோ எனக் கூறாமல் கூறி, அவள் உள்ளத்தில் ஒர் இன்ப வேட்கை எழவும் செய்தார். .w. -

மாதரி தீதிலள்; முதுமகள், செவ்வியள் அளியள் என்பதை அடிகளார் அறிந்திருந்தார்; அதனால் கண்ணகியை ஏற்றுச் செல்லும் அவள் கண்ணகிக்குச் செய்ய வேண்டுவன யாவை என்பதை அறிந்திருப்பாள்; ஆகவே, அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை; இதை அடிகளார் அறிவார்; ஆனால், அவர் கண்ணகிபால் கொண்டிருந்த பற்றும் பாசமும், மாதரி தன் கடமைகளை ஒருவேளை மறந்துவிடுவளோ? அதனால் கண்ணகி பேணப்படாமல் விடப்படுவளோ? கணவனுக்கு நலம் தேடித் தருவதல்லது தனக்கு நலம் தேடிக்கொள்ள அறியாதவளாயிற்றே கண்ணகி; அத்தகையாளை மாதரியும் கவனிக்காது விட்டு விட்டால், கண்ணகி நம்ைகாண மாட்டாளே என்பதால், "கண்ணகியை நீராட்டி விடுவதும், அவள் கண்களுக்கு மைதீட்டி விடுவதும், அவள் கூந்தலில் மலர் சூட்டுவதும், அவள் மேனியைத் தூய மெல்லிய