பக்கம்:மாத இதழ் கட்டுரைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேதினியின் மேன்மையான காலைக் கபாடத்தைத் திறப்பது யார் ? நித்திரை சுகத்தில் மோன உலகம் - சற்றே நிம்மதியாகக் கிடக்குமானால், சத்தான காரியங்கள் சமயத்தில் நடக்காதே - என்றஞ்சி, வைகறை வரத் தவறுகின்ற நேரத்திலே எல்லாம், கை - கறையுடைந்த தனது கவிதையால் பாரைத்தட்டி எழுப்பும் திறனும் - உரனுடன், பாவேந்தர் கவிதைக்கு இருந்ததை பல நிகழ்வுகளிலேயே பார்த்திருக்கின்றோமே! பாவேந்தர் கவிதையிலேயே - இலக்கணப் பிழைகள் உள்ளன என்று, அழுக்காற்றுப் பிறவிகள், சிலபுறம் பேசித் திரிந்தன ! எதிரிகள் விரித்த அந்த வஞ்சக இலக்கண வியூகச் சூதுக் களத்தை பாரதிதாசன் கண்டார், இலக்கண பாசறை குவிந்த கருவியாய் எழுச்சிப் பெற்றார்: காய்வரும் இடத்தைக் கவிதையிலே காட்டி, கனிவரும் அசைக் கிளைகளைச் சுட்டி, குற்றியலுகரம் புணரும் இடங்களிலே ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் எல்லாம், இசையால் ஏற்பட்ட இன்னல் அல்ல என்று கடாவி விளக்கம் தந்தார் ! மோனை முத்திரைகள் இல்லையே என்று மோதியவர்களின் முகத்திலறைந்தாற் போல 'காரிகை உமிழுமாறு பெரும்புலவன் கபிலர் காட்டிய கவரிசைகளை வேல்களாக வீசிச் சாய்த்தார் - சழக்கத்தை இலக்கணப் பாதையில் வழுக்கி விழாமல் எப்போதும், எச்சரிக்கையோடும், விழிப்போடும் எழுதும் முதிர்ந்த கவிஞரை புரட்சி வித்தகரை, வேண்டுமென்றே குறை கூற முற்பட்ட சிலர் காலமது காரணம், அவர்தந்தை பெரியார் பாதச் சுவடுகளிலேயே நடந்து, ஆரிய ஆதிக்கத்தை ஆணிவேரற - சாய்க்கின்றாரே என்ற காழ்ப்பு தமிழின் மொத்தத்தில் குத்தகை எடுத்தக் கவிதைக் காப்பியங்கள் பலவற்றை அறிவுச் சமுதாயத்திற்கு அறிமுகப் படுத்தியவர் பாவேந்தர் ! கோடையில் கூட ஒடையில் தண்ணி இருக்காது ஆனால், புரட்சிக் கவியின் கவிதை ஓடையிலே கோடைக் கூட கவிதை குடித்ததாக உண்டு வரலாறு : பருவத்தில் பூக்கும் பூக்கள் உண்டு - ஆனால் பாவேந்தர் காலம் கடந்து எப்போதும் பூக்கும் உவமைக்காடு! பொலிவற்ற கீழ்மேல் புரட்டுகளை நலிவு செய்வதில், அவர் பாண்டியன் வாள்! ஓய்வெடுத்த வாழ்க்கையில் ஒடுங்கும் மயிலாய் கைம் வாழ்வு கசந்து நிற்க, நிலா முகத்தாள் வேர் பலா என்று கூறி, பூரிக்கும் சுவை மகிழ்ச்சியால் இளைஞர்களுக்கு இன்பத்தை நினைவூட்டி பூரிப்பால் கோரிக்கை எழுப்பிடத் தூண்டிய புதிய மறுமலர்ச்சி சமுதாயச் சிற்பி அவர், வந்து போகும் நிலவல்ல - கவிஞர் பாம், வரம்போடு வீசும் தென்றல் வெள்ளு வா பொழிவு: பாரதியாரைப் பற்றி அவர் பாடியதைப் போல எவரும் இனிப் பாட முடியாது! அவ்வளவு ஆசான் தாசன்! சுதந்தரத்திற்கு அடிமையாகும் சந்தக் கவியா? செந்தமிழுக்குப் பாரதிதாசனாரே சான்று உருகும் வெள்ளியை ஒழுங்காகச் சொல்லாக்கி, பெருகும் தமிழுணர்வை - பாற்குழம்பை 4, , 發 |/૮ |ટ્ટ ડ્રે அறிவுக்கர இ! - 4 i Ġud, 2006