பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தி.மு.க. ஆட்சியில் மாநில சுயாட்சித் தீர்மானம். மாநில சுயாட்சி பற்றியும், கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் தலைமையிலான தமிழக அரசால் நியமிக்கப்பட்ட இராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ் நாடு அரசு அளித்திருக்கும் கருத்துரைகளை மத்திய அரசு ஏற்று அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பது குறித்தும், 16-4-1974 அன்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழக சட்டப் பேரவையில் முன் மொழிந்த தீர்மானமும் பேருரையும்: தீர்மானம்: மாண்புமிகு டாக்டர் மு கருணாநிதி: தலைவரவர்களே, "மாநில சுயாட்சி பற்றியும், இராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் பற்றியும் தமிழ்நாடு அரசின் கருத்துரை களையும், இராஜமன்னார் குழுவின் அறிக்கையையும் இப் பேரவை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, பல்வேறு மொழி, நாகரீகம், பண்பாடு ஆகியவைகளைக் கொண்ட இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டைப் பேணிக்காக்கவும், பொரு ளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், மக்களுடன் நெருங் கிய தொடர்பு கொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றிச் செயல்படவும், மாநில சுயாட்சி பற்றியும், இராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துக்களை மத்திய அரசு ஏற்று-மத்தியில் கூட்டாட்சி, சுயாட்சி கொண்ட மாநிலங்களில் உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் எனறு இப்பேரவை முடிவு செய் கிறது." என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.