பக்கம்:மானிட உடல்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியும் நிணநீரும் 51 பெருங் குழல்களாக ஒன்றுசேர்கின்றன ; இப் பெருங் குழல் களின் சுவர்களும் நுட்பமாக உள்ளன. முக்கியமாக, இந்தப் பெருங் குழல்கள் இதயத்தின் வலப்புறத்திற்கு அருகிலுள்ள இரண்டு பெரிய குருதி வடிகுழல்களில் காம் கொண்டுள்ள நிணநீரைக் கொட்டிவிடுகின்றன. நிணநீர், உயிரணுக்களைச் சூழ்ந்துள்ள இழையப் பாய் மம், உயிரணுக்களுக் கிடையிலுள்ள பாய்மம், குருதியின் பிளாஸ்மா ஆகியவற்றினிடையேயுள்ள உறவுமுறை, நீர் வளர்சிதை மாற்றம்பற்றிக் கூறும் இடத்தில் இன்னும் சற்று விரிவாக ஆராயப்பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/59&oldid=866475" இலிருந்து மீள்விக்கப்பட்டது