இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பதிப்புரை
காலத்தை வென்று, ஞாலத்தில்
நிலைத்து நிற்கக்கூடிய வலிவும், பொலிவும் பெற்றவை கலைஞர் அவர்களின் நூல்கள். அவரது நூல்கள் பலவற்றைப் பதிப்பிக்கும் பொறுப்பும் சிறப்பும் தமிழ்க்கனி பதிப்பகத்திற்கு ஏற்கனவே வழங்கப் பட்டிருக்கிறது. கலைஞர் அவர்களுக்கு
முழுமையாக நிறைவு தரும் வண்ணம்
பதிப்பித்துத் தருவதென்பது மிகவும்
கடினமான காரியம். எனினும், ஒவ்வொரு
முறையும் திறன் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, உழைத்து உருவாக்கிப் பதிப்பித்ததால்தான் மீண்டும் மீண்டும் அந்தப் பெருமை தமிழ்க்கனிப் பதிப்பகத்தார்க்கு கிடைத்து வருகிறது.